செய்திகள்
கொலை

எருமப்பட்டி அருகே விவசாயி அடித்துக்கொலை

Published On 2021-06-26 08:29 GMT   |   Update On 2021-06-26 08:29 GMT
எருமபட்டி அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி (34). இவரது மனைவி கவுரி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். பழனிசாமியின் தந்தை பெருமாளும், தாய் மணியம்மாள் ஆகியோர் அவரது சகோதரர் சுப்பிரமணி வீட்டில் வசித்து வருகிறார்கள். இதனிடையே பழனிச்சாமி தனிமையில் இருப்பதால் சமைப்பதற்காக அவரது தாய் மணியம்மாளை அழைத்துவர அவர் சகோதரர் சுப்ரமணி வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி மற்றும் தந்தை பெருமாள் ஆகிய இருவரும் பழனிச்சாமியை கீழே தள்ளி விட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பழனிச்சாமி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி இறந்தார். இதுகுறித்து வேலம்பட்டி போலீசார் சுப்பிரமணி மற்றும் அவரது தந்தை பெருமாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 2 பேரும் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News