செய்திகள்
தோகைமலை அருகே மதுவை பதுக்கி விற்றவர் கைது
தோகைமலை அருகே மதுவை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:
தோகைமலை பச்சனம்பட்டி ரோடு பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில் தோகைமலை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, பச்சனம்பட்டி ரோடு பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதிதியில் மதுவை பதுக்கி வைத்து விற்ற திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வேங்கை குறிச்சியை சேர்ந்த மணிவேல் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.