செய்திகள்
கோவையில் உறவினர் வீட்டுக்குச் சென்ற அக்காள்-தங்கை மாயம்
கோவையில் உறவினர் வீட்டுக்குச் சென்ற மகள்கள் மாயமானது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம் பாளையத்தை சேர்ந்தவர் தம்புராஜ். இவரது மகள்கள் கிருத்திகா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது தங்கை ஹரிப்பிரியா (15). அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டிலிருந்த இவர்கள் 2 பேரும் தங்களது பெற்றோரிடம் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த தம்புராஜ் தனது மகள்களை அக்கம்பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் மாயமான தனது மகள்களை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அக்கா தங்கையை தேடி வருகிறார்கள்.
கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம் பாளையத்தை சேர்ந்தவர் தம்புராஜ். இவரது மகள்கள் கிருத்திகா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது தங்கை ஹரிப்பிரியா (15). அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டிலிருந்த இவர்கள் 2 பேரும் தங்களது பெற்றோரிடம் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த தம்புராஜ் தனது மகள்களை அக்கம்பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் மாயமான தனது மகள்களை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அக்கா தங்கையை தேடி வருகிறார்கள்.