செய்திகள்
கைது

கயத்தாறு அருகே 4 வயது சிறுமியிடம் சில்மிஷம்- வாலிபர் கைது

Published On 2021-06-19 10:02 GMT   |   Update On 2021-06-19 10:02 GMT
கயத்தாறு அருகே 4 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் காளிராஜ் (வயது23). இவர் நாகர்கோவிலில் சம்சா வியாபாரம் செய்து வருகிறார்.

தற்போது ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். காளிராஜ் ஒரு 4 வயது சிறுமியை தனியாக கூட்டி சென்று சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளது. 

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் கயத்தாறு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகு குமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Tags:    

Similar News