செய்திகள்
அமைச்சர் சேகர் பாபு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ஆய்வு

Published On 2021-06-18 02:46 GMT   |   Update On 2021-06-18 02:46 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு தாய்லாந்து கண் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை: 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, கோவில் யானை பார்வதிக்கு தாய்லாந்து கண் மருத்துவர்கள் மூலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்தாண்டு நடைபெற உள்ள குடமுழுக்கு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆலோசனையின் போது அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 
Tags:    

Similar News