செய்திகள்
கைது

தாராபுரம் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த 4 பேர் கைது

Published On 2021-06-02 07:27 GMT   |   Update On 2021-06-02 12:25 GMT
தாராபுரம் டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானகடை உள்ளது. ஊரடங்கு காரணமாக பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி பாதுகாப்பு பணியில் இருந்த அலங்கியம் போலீசார்  டாஸ்மாக் கடையை கண்காணிக்க சென்றபோது கடையின் இரும்பு ஷட்டர் வெல்டிங் எந்திரத்தால் வெட்டி எடுக்கப்பட்டு மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பெட்டிகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர்.
 
மேலும் போலீசில் சிக்காமல் இருக்க டாஸ்மாக் கடையின் வெளிப்புறம் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடி சென்றனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
 
இந்தநிலையில் தாராபுரம் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது 4 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அலங்கியம் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்ததை  ஒப்பு கொண்டனர். அவர்கள் அப்பகுதியை சேர்ந்த  ராமகிருஷ்ணன் (வயது 30), நவநீதன் (32), மாரிமுத்து (27), பொன்னரசு (27)  என்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.75ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News