செய்திகள்
தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி
தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பின்னர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* 2020-21ம் கல்வி ஆண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி.
* தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பின்னர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும்.
* பாடப்புத்தகங்களை பள்ளி திறந்ததும் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.