செய்திகள்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆவின் பாலகம் மூடப்பட்டுள்ள காட்சி.

ஆவின் பாலகம் மூடல்-நோயாளிகள் தவிப்பு

Published On 2021-05-27 08:04 GMT   |   Update On 2021-05-27 08:04 GMT
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் இயங்கிய ஆவின் பாலகத்தை மூட உத்தரவிட்டதால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் மற்றும் தனியார் டீக்கடை இயங்கி வந்தது.புதிதாக பொறுப்பேற்றுள்ள ‘டீன்’ முருகேசன் பொதுமக்கள் கூட்டம் சேர்வதை தடுக்க ஆவின் பாலகத்தை மூட உத்தரவிட்டார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் சேர்ந்து நிற்பது, ஆவின் பாலகம் அருகே கூட்டமாக நின்று பால் மற்றும் சூடான தண்ணீர் வாங்குவது தடைபட்டுள்ளது.அந்த வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தநிலையில் மகப்பேறு பிரிவில் உள்ள பெண்களுக்கு ஆவின் பாலகத்தில் இருந்து வெந்நீர் கிடைத்து வந்தது. திடீரென மூடியதால் வெந்நீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஊரடங்கால் வேறு கடைகளும் இல்லாததால் வெந்நீருக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மருத்துவமனை நிர்வாகம் ஆவின் பாலகம் மட்டும் இயங்க அனுமதிக்க வேண்டும். ஊரடங்கால் வேறு கடைகள் இல்லாததால் ஏழை, எளிய மக்கள் டீ குடிக்க வசதியில்லை.கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆவின் பாலகத்தில் இருந்து தான், சூடான தண்ணீர் கிடைத்தது. எனவே மீண்டும் ஆவின் பாலகத்தை மட்டும் திறக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News