செய்திகள்
விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியனுக்கு கொரோனா
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 4 ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 4 ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. பாண்டியன், நேற்று முன்தினம் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். பரிசோதனை முடிவில் டி.ஐ.ஜி. பாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்தவொரு அறிகுறிகளும் இல்லாததால் சுகாதாரத்துறையினரின் அறிவுரைப்படி அவர், தனது முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 4 ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. பாண்டியன், நேற்று முன்தினம் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். பரிசோதனை முடிவில் டி.ஐ.ஜி. பாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்தவொரு அறிகுறிகளும் இல்லாததால் சுகாதாரத்துறையினரின் அறிவுரைப்படி அவர், தனது முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.