செய்திகள்
கம்பம் பஸ்நிலையத்தில் மூதாட்டி அடித்து கொலை
கம்பம் பஸ்நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள தோப்பில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மூதாட்டியின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது தெரியவில்லை. பஸ்நிலையத்தில் காந்திருந்தபோது நகைக்காக அவரை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதும் முன்பகையில் மூதாட்டி கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள தோப்பில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மூதாட்டியின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது தெரியவில்லை. பஸ்நிலையத்தில் காந்திருந்தபோது நகைக்காக அவரை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதும் முன்பகையில் மூதாட்டி கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.