செய்திகள்
தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர் உள்பட 7 பேருக்கு கொரோனா
தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கிளை மேலாளர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர், கிளை மேலாளர் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது.
அதனால் அவரை சுகாதார துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு பணிபுரியும் மேலாளர் மற்றும் கிளை மேலாளர் உள்பட 70 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அதில் மேலாளர் மற்றும் கிளை மேலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மேலும் 80 பேருக்கு பரிசோதனை செய்தனர்.
அதில் 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்களும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதால் போக்குவரத்து ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர், கிளை மேலாளர் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது.
அதனால் அவரை சுகாதார துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு பணிபுரியும் மேலாளர் மற்றும் கிளை மேலாளர் உள்பட 70 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அதில் மேலாளர் மற்றும் கிளை மேலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மேலும் 80 பேருக்கு பரிசோதனை செய்தனர்.
அதில் 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்களும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதால் போக்குவரத்து ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.