செய்திகள்
தஞ்சையில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
தஞ்சையில் கடை முன்பு நின்றிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது63). இவர்கள் அதே தெருவில் சாலையோரம் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு தனது கடையின் முன்பு முத்துலட்சுமி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சட்டென்று முத்துலட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி திருடன்.. திருடன்... என கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து முத்துலட்சுமி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது63). இவர்கள் அதே தெருவில் சாலையோரம் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு தனது கடையின் முன்பு முத்துலட்சுமி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சட்டென்று முத்துலட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி திருடன்.. திருடன்... என கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து முத்துலட்சுமி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.