செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில்மேலும் 12 பேருக்கு கொரோனா

Published On 2021-02-16 19:08 GMT   |   Update On 2021-02-17 08:27 GMT
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 222 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 834 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Tags:    

Similar News