செய்திகள்
தந்தை இருக்கும்போதே விருது கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்- 2 ரூபாய் டாக்டரின் மகள் பேட்டி
தந்தை இருக்கும்போதே விருது கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று 2 ரூபாய் டாக்டரின் மகள் பிரீத்தி கூறியுள்ளார்.
2 ரூபாய் டாக்டர் திருவேங்கடத்திற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது தொடர்பாக அவரது மகள் பிரீத்தி மகிழ்ச்சி பொங்க அளித்த பேட்டி வருமாறு:-
மத்திய அரசு எனது தந்தைக்கு இந்த விருதை அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் அவர் உயிருடன் இருந்த போதே இந்த விருது கிடைத்து இருந்தால் அவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். எங்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.