செய்திகள்
கோவில்பட்டி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுகிராமம் ஜெ.ஜெ. நகரில் தேங்கியுள்ள மழைநீர், சாக்கடைநீர் சுகாதாரகேடு ஏற்படுத்துவதாகவும், இவற்றை உடனடியாக அகற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று 8-வது வார்டு செயலாளர் செண்பகபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதி மாரியப்பன், மாரிச்செல்வம், நகர துணை செயலாளர் வேல்முருகன், முன்னாள் நகரசபை கவுன்சிலர் மாரியப்பன், செய்தி தொடர்பாளர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.