செய்திகள்
கோப்புபடம்

கோவில்பட்டி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-25 09:51 GMT   |   Update On 2021-01-25 09:51 GMT
கோவில்பட்டி அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி புதுகிராமம் ஜெ.ஜெ. நகரில் தேங்கியுள்ள மழைநீர், சாக்கடைநீர் சுகாதாரகேடு ஏற்படுத்துவதாகவும், இவற்றை உடனடியாக அகற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று 8-வது வார்டு செயலாளர் செண்பகபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதி மாரியப்பன், மாரிச்செல்வம், நகர துணை செயலாளர் வேல்முருகன், முன்னாள் நகரசபை கவுன்சிலர் மாரியப்பன், செய்தி தொடர்பாளர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News