செய்திகள்
பள்ளிபாளையத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம்
பள்ளிபாளையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் வயல்வெளியில் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு அறிவித்த அடிப்படையில் தங்களுக்கு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமாரபாளையம் வட்டம் சவுதாபுரம் ஊராட்சி, படைவீடு பேரூராட்சிக்குட்பட்ட மக்கிரிபாளையம் முதல் முடையூர், அருவா புலியூர், பண்ணாடி காடு உள்ளிட்ட பகுதிகளில் 7 இடங்களில் வயல்வெளியில் இறங்கி அவர்கள் குடும்பத்துடன் 6-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.