செய்திகள்
கைது

கத்தியைக் காட்டி மிரட்டிரூ.35 ஆயிரம், 1½ பவுன் சங்கிலி பறிப்பு- 3 பேர் கைது

Published On 2021-01-16 12:39 GMT   |   Update On 2021-01-16 12:39 GMT
கத்தியைக் காட்டி மிரட்டிரூ.35 ஆயிரம், 1½ பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:

துறையூரில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 57). சம்பவத்தன்று இவர் பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, துறையூரில் ஒரு ஓட்டல் முன் நின்று கொண்டிருந்த 3 பேர் பிரபாகரனை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.35 ஆயிரம் மற்றும் 1½ பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக சிங்களாந்தபுரத்தை சேர்ந்த அசோக்குமார்(40), கண்ணனூரை சேர்ந்த பிரகலாதன்(47) மற்றும் பரமசிவம்(51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News