செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 15-ந்தேதி திறக்கக்கூடாது - கலெக்டர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 15-ந்தேதி திறக்கக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்:
தமிழ்நாடு மதுபான சில்லரை வணிக உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே திருவள்ளுவர் தினமான வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் குடியரசு தினமான 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) , வள்ளலார் நினைவு தினமான 28-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 3 நாட்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும். ஆகவே மேற்கண்ட 3 நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் இயங்காது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.