செய்திகள்
வாக்காளர் பெயர் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை தாசில்தார் மாணவிகளுக்கு வழங்கினார்

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

Published On 2020-12-12 10:09 GMT   |   Update On 2020-12-12 10:09 GMT
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் குறித்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாசில்தார் நக்கீரன் மாணவ-மாணவிகளை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது தங்களது பகுதிகளில் உள்ளவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News