செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

காலி இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை: நீதிமன்றத்தில் அரசு தகவல்

Published On 2020-12-01 10:43 GMT   |   Update On 2020-12-01 10:43 GMT
கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால் மருத்துவ இடங்களை தவறவிட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீது உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் சிலருக்கு அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால் வருடத்திற்கு 5 லட்சத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் சில மாணவர்கள் மருத்துவ இடங்களை தேர்வு செய்யவில்லை. திமுக தலைவர் முக ஸ்டாலின் அந்தக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்றார். அதன்பின் தமிழக அரசே அந்த செலவினத்தை ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்தது.

அரசு இதை முன்னதாகவே அறிவித்திருந்தால் நாங்கள் அந்த இடங்களை தேர்வு செய்திருப்போம், எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஒன்று இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி அளிக்கப்படும் இடங்கள், காலியாக இருக்கும் இடங்கள் ஆகியவற்றை நிரப்பும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக தவறவிட்ட மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News