செய்திகள்
கோப்புப்படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 80 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

Published On 2020-11-28 22:12 GMT   |   Update On 2020-11-28 22:12 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்து 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்து 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 648 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 513 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 651 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 389-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 712 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 864 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 423 பேர் உயிரிழந்துள்ளனர். 282 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News