செய்திகள்
அலங்காநல்லூர் அருகே மது விற்றவர் கைது
அலங்காநல்லூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
அலங்காநல்லூர் அருகே உள்ள தாதக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று ரமேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து 68 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.