செய்திகள்
குளித்தலை அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது வழக்கு
குளித்தலை அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
குளித்தலை:
குளித்தலையில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 31 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.