செய்திகள் (Tamil News)
தற்கொலை

கணவர் திட்டியதால் விஷம் தின்று பெண் தற்கொலை

Published On 2020-10-21 09:34 GMT   |   Update On 2020-10-21 09:34 GMT
பெரம்பலூரில் கணவர் திட்டியதால் விஷம் தின்று பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் நேருநகரை சேர்ந்தவர் செல்லமுத்து. தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பரமேஸ்வரி(வயது 50). இவர்களுக்கு ராஜசேகர், ரமேஷ் என 2 மகன்கள் உள்ளனர். மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. செல்லமுத்துவுக்கு கடந்த சில நாட்களாகவே வேலை இல்லாததால் வீட்டிலேயே இருந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்லமுத்துவை, வேலைக்கு செல்ல வேண்டியது தானே என்று பரமேஸ்வரி திட்டியுள்ளார். வேலை இருந்தால் தானே போக முடியும் என்று கூறி செல்லமுத்து, பரமேஸ்வரியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி எலி மருந்தை (விஷம்) தின்றதில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை செல்லமுத்து மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News