செய்திகள்
பழனியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்க்காரப்பட்டி
பழனி அடிவாரம் மதனபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). என்ஜினீயர். நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் மடத்துக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தாழையூத்து அருகே அவர் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்று முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.