செய்திகள்
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு- மேலும் சிலரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த வியாபாரி செல்வன் (வயது 32), நிலத்தகராறு காரணமாக காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது திசையன்விளை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, கோர்ட்டில் சரண் அடைந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் மற்றும் கைதான திருமணவேலின் உறவினர்களான முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான 5 குழுவினர், கைதான திருமணவேல் உள்ளிட்ட 4 பேரிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மேலும் சிலரையும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த வியாபாரி செல்வன் (வயது 32), நிலத்தகராறு காரணமாக காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது திசையன்விளை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, கோர்ட்டில் சரண் அடைந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் மற்றும் கைதான திருமணவேலின் உறவினர்களான முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான 5 குழுவினர், கைதான திருமணவேல் உள்ளிட்ட 4 பேரிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மேலும் சிலரையும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.