செய்திகள்
மீட்பு

குளச்சல் அருகே நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு

Published On 2020-09-23 09:39 GMT   |   Update On 2020-09-23 09:39 GMT
குளச்சல் அருகே நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்களை தூத்துக்குடி கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி:

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் சுமார் 27 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென படகு என்ஜின் பழுதடைந்தது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் ‘அபினவ்’ மற்றும் ‘டோர்னியர்’ விமானத்தில் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று மற்றும் மழை பெய்ததால் சுமார் 3 மணி நேரமாக போராடி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களையும் மீட்டனர். பின்னர் மீனவர்களை படகுடன் கரைக்கு அழைத்து வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News