செய்திகள்
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்காடு தாலுகா போலீசார் சாத்தூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 19) என்பதும், நந்தகுமாரின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.