செய்திகள்
டாஸ்மாக் கடை

சென்னையில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு- நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள்

Published On 2020-08-17 07:29 GMT   |   Update On 2020-08-17 07:29 GMT
சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* சாமியானா பந்தல், மைக் செட் ஏற்பாட்டுடன் சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

* மதுக்கடையின் கிரில் பகுதிக்கு வெளியே கவுண்ட்டர் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும்.

* வாடிக்கையாளர்கள் நிற்க சாமியானா அமைக்க வேண்டும், அறிவிப்புகளை வெளியிட மைக் செட் பொருத்த வேண்டும்.

* டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும்.

* டாஸ்மாக் மதுபான கடையில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மதுக்கடைக்கு வெளியே குறைந்தது 3 அடி இடைவெளிவிட்டு 50 வட்டங்கள் போட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News