செய்திகள்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக உயர்வு
கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 90 கனஅடியாக உயர்ந்துள்ளது.
காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 45 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை அது 90 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. 120 அடி கொள்ளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 75.8 அடியாக உள்ளது. ஒரே நாளில் 5.7 அடி உயர்ந்துள்ளது.