செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்வு

Published On 2020-06-09 07:59 GMT   |   Update On 2020-06-09 07:59 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 1740 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 1451 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 100.69 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.70 அடியானது.

Tags:    

Similar News