செய்திகள்
ரெயில்

மதுரையில் இருந்து சத்தீஸ்கருக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2020-06-08 09:37 GMT   |   Update On 2020-06-08 09:37 GMT
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் சிறப்பு ரெயில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறது. இந்த ரெயில் சென்னை, விஜயவாடா வழியாக சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.
மதுரை:

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் இவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட தென்மாவட்டங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் சிறப்பு ரெயில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறது. இந்த ரெயில் சென்னை, விஜயவாடா வழியாக சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

முன்னதாக இந்த ரெயிலில் பயணம் செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் உரிய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News