செய்திகள்
அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் ரம்ஜான் வாழ்த்து
அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மகிழ்ச்சிகரமான ஈகைத்திருநாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள் புனித ரமலான் மாதத்தின் மேன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்த திருநாளானது உண்மையான இறை வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், சகோதரத்துவத்தை பேணுதல், மிகப்பெரிய இறைவனுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய நல் இயல்புகளை கொண்டாடுவதாக அமைந்துள்ளது.
ஈகைத் திருநாள் புனிதம் மற்றும் உன்னதமான கொள்கைகளை நமது வாழ்க்கையில் ஏற்படுத்திடவும் அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மகிழ்ச்சிகரமான ஈகைத்திருநாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள் புனித ரமலான் மாதத்தின் மேன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்த திருநாளானது உண்மையான இறை வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், சகோதரத்துவத்தை பேணுதல், மிகப்பெரிய இறைவனுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய நல் இயல்புகளை கொண்டாடுவதாக அமைந்துள்ளது.
ஈகைத் திருநாள் புனிதம் மற்றும் உன்னதமான கொள்கைகளை நமது வாழ்க்கையில் ஏற்படுத்திடவும் அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.