செய்திகள்
கொள்ளை

சின்னமனூர் அருகே வீடு புகுந்து பெண்களிடம் 10 பவுன் நகை கொள்ளை

Published On 2020-05-22 08:49 GMT   |   Update On 2020-05-22 08:49 GMT
சின்னமனூர் அருகே வீடு புகுந்து பெண்களிடம் 10 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி மூர்த்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மயில்தாயம்மாள். சம்பவத்தன்று 2 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 5 பேர் மயில்தாயம்மாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

மேலும் பக்கத்து வீட்டின் கதவை உடைத்து முருகன் மனைவி வேல்தாயம்மாளிடம் 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த கும்பல் கைவரிசையை காட்ட முயன்றுள்ளனர்.

இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மர்ம கும்பல் அட்டகாசத்தால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News