செய்திகள்
கொரோனா தொற்று பாதிப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

Published On 2020-05-20 13:57 GMT   |   Update On 2020-05-20 13:57 GMT
தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து திருச்சி திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 67 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 64 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து திருச்சி திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News