செய்திகள்
கைது

பெரம்பலூர் அருகே மொபட் திருடிய வாலிபர் கைது

Published On 2020-05-19 11:11 GMT   |   Update On 2020-05-19 11:11 GMT
பெரம்பலூர் அருகே மொபட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அண்ணாநகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் தமிழ்ச்செல்வன்(வயது 31). இவர் பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் நேற்று மதியம் தனது மொபட்டில் ஓட்டலுக்கு வந்தார்.

பின்னர் மொபட்டை ஓட்டலுக்கு முன்பு நிறுத்தி விட்டு, உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து தமிழ்ச்செல்வன் பார்த்தபோது மர்மநபர் ஒருவர் மொபட்டை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர், அவ்வழியாக சென்றவர்களின் உதவியுடன் விரட்டி சென்று, அந்த மர்மநபரை கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த நபரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மொபட்டை திருடிய நபர் வடக்கு மாதவி சமத்துவபுரத்தை காந்திநகரை சேர்ந்த அந்தோணி மகன் தேவராஜ்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்த மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News