செய்திகள்
சங்கரன்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
சங்கரன்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது32). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று ராஜூ களப்பாகுளம் விலக்கு அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் ராஜூ பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜூ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜூக்கு திருமணமாகி 9 மாத ஆண்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது32). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று ராஜூ களப்பாகுளம் விலக்கு அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் ராஜூ பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜூ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜூக்கு திருமணமாகி 9 மாத ஆண்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.