செய்திகள்
கோப்பு படம்

நிலத்தகராறில் பயங்கர கோஷ்டி மோதல் - சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்

Published On 2020-02-11 09:42 GMT   |   Update On 2020-02-11 09:42 GMT
காரைக்கால் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
காரைக்கால்:

காரைக்கால் அருகே விழிதியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் முருகானந்தம், பலராமன். இவர்களிடையே ஆற்றங் கரை ஓரம் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி மோதி உள்ளனர்.

நேற்று இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி கம்புகளால் தாக்கி கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அவர்கள் மோதலை விடவில்லை.

இந்த மோதலின் போது கற்கள் வீசப்பட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், போலீஸ்காரர்கள் எழிலரசன், பாபு ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் பல்வால், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன், இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதுதொடர்பாக இரு தரப்பினர்மீது போலீசார் வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். அந்த பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News