செய்திகள்
மாணவி ஒருவருக்கு மரக்கன்று வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்

சிறப்பாக மரம் வளர்த்த பள்ளிகளுக்கு ‘ஈஷா பசுமை பள்ளி’விருது - அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

Published On 2020-02-03 09:49 GMT   |   Update On 2020-02-03 09:49 GMT
சிறப்பாக மரம் வளர்த்த பள்ளிகளுக்கு ‘ஈஷா பசுமை பள்ளி’ விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
தாம்பரம்:

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் மற்றும் தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட பசுமை பள்ளி இயக்கத்தின் 3-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் விழா தாம்பரத்தில் உள்ள தனியார் மஹாலில் இன்று (பிப்ரவரி 3) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.    

இந்த விழாவில் ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் வழிகாட்டுதலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரக் கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 35 பள்ளிகளுக்கு ’ஈஷா பசுமை பள்ளி’ விருதுகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் வழங்கினார்.

Tags:    

Similar News