செய்திகள்
பெண் மரணம்

கபிஸ்தலம் அருகே மயங்கி விழுந்த பட்டதாரி பெண் மரணம்

Published On 2020-01-28 12:34 GMT   |   Update On 2020-01-28 12:34 GMT
கபிஸ்தலம் அருகே மயங்கி விழுந்த பட்டதாரி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை தெற்கு தெருவில் வசிக்கும் கலியமூர்த்தி மகள் ஸ்ரீவித்யா (வயது 26) பட்டதாரி பெண், திருமணமாகாதவர்.

இவர் நேற்று வீட்டில் காலை மயங்கி கிடந்தார். இதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை கலியமூர்த்தி கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தன் மகளை ஏதோ பூச்சி கடித்து இருக்கலாம் என தெரிவித்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News