செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு - காளை முட்டி மாட்டின் உரிமையாளர் பலி

Published On 2020-01-17 08:56 GMT   |   Update On 2020-01-17 08:56 GMT
அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த மாட்டின் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மதுரை:

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சோழவந்தானைச் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 26) என்பவர் தான் வளர்த்த காளையை அழைத்து வந்திருந்தார்.

போட்டி நடைபெறும்போது களத்தில் நின்றார். அப்போது ஒரு காளை குத்தியதில் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News