செய்திகள்
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
தக்கலை முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் மேத்யூ (வயது 54).
இவர் நேற்று காலையில் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்திருந்தார். பின்னர் இங்கிருந்து அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தக்கலை தொலைபேசி நிலையம் அருகே வரும்போது அவருக்கு எதிரே கார் ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்டு ஆபிரகாம் மேத்யூவிற்கு தலை மற்றும் கால் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்ற அவர் சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் மேத்யூ (வயது 54).
இவர் நேற்று காலையில் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்திருந்தார். பின்னர் இங்கிருந்து அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தக்கலை தொலைபேசி நிலையம் அருகே வரும்போது அவருக்கு எதிரே கார் ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்டு ஆபிரகாம் மேத்யூவிற்கு தலை மற்றும் கால் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்ற அவர் சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தின ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆபிரகாம் மேத்யூ மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டிவந்தது நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி பகுதியை சேர்ந்த மரியசெல்வம் (37) என்பது தெரியவந்தது.