செய்திகள்
கே.கே.நகரில் கார் கண்ணாடி உடைப்பு- வாலிபர் கைது
கே.கே.நகரில் மதுபோதையில் கார் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
கே.கே.நகர் ராணி அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நேற்று இரவு மதுபோதையில் வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு கார் கண்ணாடியை அடித்து உடைத்தார். தகவல் அறிந்ததும் கே.கே.நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா மற்றும் போலீசார் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்கிற வல்லரசு (21) என்பதும், கே.கே.நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த அவர் கடந்த 2 நாட்களாக மது குடித்து விட்டு கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
ஏற்கனவே அவர் மீது செல்போன் பறிப்பு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
கே.கே.நகர் ராணி அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நேற்று இரவு மதுபோதையில் வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு கார் கண்ணாடியை அடித்து உடைத்தார். தகவல் அறிந்ததும் கே.கே.நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா மற்றும் போலீசார் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்கிற வல்லரசு (21) என்பதும், கே.கே.நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த அவர் கடந்த 2 நாட்களாக மது குடித்து விட்டு கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
ஏற்கனவே அவர் மீது செல்போன் பறிப்பு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.