செய்திகள்
விபத்து

திருமங்கலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து - 7 பேர் படுகாயம்

Published On 2019-12-31 08:11 GMT   |   Update On 2019-12-31 08:11 GMT
திருமங்கலம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகே மறவன்குளம் 4 வழிச்சாலையில் இன்று அதிகாலை கனரக லாரி வந்து கொண்டிருந்தது. அதனை திருநெல்வேலியைச் சேர்ந்த டிரைவர் ஞானம் (வயது 27) ஓட்டி வந்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு சென்ற அந்த லாரியில் கலவை எந்திரம் ஏற்றப்பட்டிருந்தது.

அதிகாலை 5 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை தாண்டி எதிர்த்திசையில் சென்று கவிழ்ந்தது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருமங்கலம் நகர் போலீசார் விரைந்து சென்று லாரியில் வந்த ஆந்திராவைச் சேர்ந்த பாதம்பிரசாத், ராஜேஷ் உள்பட காயமடைந்த 7 பேரையும் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் பாதம் பிரசாத், ராஜேஷ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News