செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

வெள்ளகோவில் அருகே விபத்து- ஒர்க்‌ஷாப் உரிமையாளர் பலி

Published On 2019-12-06 09:26 GMT   |   Update On 2019-12-06 09:26 GMT
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒர்க்‌ஷா உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை தோப்பு பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் கருணாகரன் (வயது 37). பெருந்துறை சிப்காட் லேத் உரிமையாளர்.

கருணாகரன் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் உள்ள கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அங்கு சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் வெள்ளகோவிலை கடந்து கரூர்- கோவை ரோட்டில் உள்ள ஓலப்பாளையம் வந்தது. அப்போது சாலையோரத்தில் ஒரு சிமெண்ட் லாரி பழுதாகி நின்றது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருணாகரன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

அக்கம் பக்கத்தினர் கருணாகரனை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News