செய்திகள்
கோப்பு படம்

மோட்டார் சைக்கிள் விபத்து: தனியார் நிறுவன காவலாளி பலி

Published On 2019-12-05 06:48 GMT   |   Update On 2019-12-05 06:48 GMT
பெரியபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (38). இவர் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் பணியாற்றி வரும் அரியபாக்கம் துரை என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.

வடமதுரை எர்ணாங்குப்பம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகேவந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Tags:    

Similar News