செய்திகள்
கைது

திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது

Published On 2019-11-22 09:11 GMT   |   Update On 2019-11-22 09:11 GMT
திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே உள்ள வெறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது27). தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்த விமலா (25). என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது விமலாவுக்கு தெரியவந்தது.

இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து விமலா திருவண்ணாமலை மகளிர் போலீசில் 2 வாரங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார்.

அதில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். தற்போது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மணிகண்டன் மீதான புகார் உறுதியானது.

இதையடுத்து மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News