செய்திகள்
ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு- வாலிபர் கைது
சென்னையில் ஆட்டோவில் சவாரி செல்வது போல் நடித்து டிரைவரிடம் இருந்து பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
வியாசர்பாடி, சாலைமா நகரை சேர்ந்தவர் நாகராஜ். ஆட்டோ டிரைவர். நேற்று மாலை அவர் தண்டையார்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டி சென்றார்.
அப்போது அங்கு சவாரி ஏறிய வாலிபர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கூறினார். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோவை நிறுத்திய போது திடீரென சவாரி வந்த வாலிபர் கத்தியை காட்டி நாகராஜை மிரட்டினார். மேலும் அவரிடம் இருந்த ரூ.850யை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து நாகராஜ் ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பணம் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வியாசர்பாடி, சாலைமா நகரை சேர்ந்தவர் நாகராஜ். ஆட்டோ டிரைவர். நேற்று மாலை அவர் தண்டையார்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டி சென்றார்.
அப்போது அங்கு சவாரி ஏறிய வாலிபர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கூறினார். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோவை நிறுத்திய போது திடீரென சவாரி வந்த வாலிபர் கத்தியை காட்டி நாகராஜை மிரட்டினார். மேலும் அவரிடம் இருந்த ரூ.850யை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து நாகராஜ் ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பணம் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.