மேட்டூர் அணைக்கு நேற்று 10 ஆயிரத்து 470 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று 10 ஆயிரத்து 470 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது
கால்வாயில் வழக்கம் போல் 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே நீடிக்கிறது.
இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது.