செய்திகள்
தேனி அருகே ஆட்டோ நிறுத்தும் தகராறில் வாலிபர் மீது தாக்குதல்
தேனி அருகே ஆட்டோ நிறுத்தும் தகராறில் வாலிபர் தாக்கப்பட்டார்.
தேனி:
தேனி அருகே கூலையனூரைச் சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக் (வயது 24). இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான நடராஜனுக்கும் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நடராஜன் மற்றும் அவரது மகன் வீரராஜன் கார்த்திக்கை கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் இதனை தடுக்க வந்த முருகனும் தாக்கப்பட்டார். இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதே போல் நடராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.